என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 50 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும்
Byமாலை மலர்25 March 2019 5:41 AM GMT (Updated: 25 March 2019 5:41 AM GMT)
இந்தியா முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் (2019-2020) 50 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் கூறியுள்ளார். #AnnaUniversity
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பி.சி.சந்திரசேகரன் எழுதிய ‘நவீன அறிவியல் சிந்தனைகள் (மாடர்ன் சயின்டி பிக் தாட்ஸ்’) என்ற புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.
அதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் டி சகஸ்ரபுத்தே கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
‘‘தற்போது நாடுமுழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 14.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில் 8 முதல் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்து என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்த கல்வி ஆண்டில் (2019-2020) 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும். தொடக்கத்தில் 10 ஆயிரம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 16.5 லட்சம் இடங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் அவை 14.5 லட்சம் இடங்களாக குறைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற மற்ற கல்வி நிலையங்கள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்குமா? என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் என்ஜினீயரிங் மாணவர்கள் மற்ற துறை மாணவர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற வேண்டும் என விரும்புகிறோம்’’ என்றார். #AnnaUniversity
அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பி.சி.சந்திரசேகரன் எழுதிய ‘நவீன அறிவியல் சிந்தனைகள் (மாடர்ன் சயின்டி பிக் தாட்ஸ்’) என்ற புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.
அதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் டி சகஸ்ரபுத்தே கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
‘‘தற்போது நாடுமுழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 14.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில் 8 முதல் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்து என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்த கல்வி ஆண்டில் (2019-2020) 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும். தொடக்கத்தில் 10 ஆயிரம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 16.5 லட்சம் இடங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் அவை 14.5 லட்சம் இடங்களாக குறைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற மற்ற கல்வி நிலையங்கள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்குமா? என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் என்ஜினீயரிங் மாணவர்கள் மற்ற துறை மாணவர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற வேண்டும் என விரும்புகிறோம்’’ என்றார். #AnnaUniversity
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X