என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை
Byமாலை மலர்22 March 2019 6:17 AM GMT (Updated: 22 March 2019 6:17 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறு காரணமாக 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 32).
இவருக்கும் செங்கான் கொட்டவூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 1½ வயதில் நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
சோலைராஜன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அங்கு குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
பங்குனி உத்திர திருவிழாவிற்காக தனது மனைவி தீபா மற்றும் மகள் நித்யஸ்ரீ ஆகிய 2 பேரையும் செங்கன்கொட்டாவூர் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
திருவிழாவிற்கு சென்ற தீபா நேற்று குடிசை வீட்டிற்குள் சென்று தனது குழந்தை நித்யஸ்ரீ மீதும், அவர் மீதும் மண்எண்ணை கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் தீ வீடு முழுவதும் பரவியதால் குடிசை வீடு தீப்பற்றி கொண்டது. அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த உறவினர்கள் திடீரென்று குடிசை வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். அங்கு தீபாவும், நித்யஸ்ரீயும் தீயில் கருகி அலறுவதை கண்டனர்.
2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தாயும், மகளும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று தீபா, நித்யஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபாவுக்கும், சோலைராஜனுக்கு இடையே குடும்பதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபா தனது குழந்தைக்கு தீவைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
குடும்ப பிரச்சனை காரணமாக தீபா தனது குழந்தை மீது தீவைத்து கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிசை வீடு தீப்பிடித்து இருவரும் இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஒ. சரவணன் விசாரணை நடத்தி வருகின்றார். திருவிழாவிற்காக வந்த தீபா தனது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 32).
இவருக்கும் செங்கான் கொட்டவூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 1½ வயதில் நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
சோலைராஜன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அங்கு குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
பங்குனி உத்திர திருவிழாவிற்காக தனது மனைவி தீபா மற்றும் மகள் நித்யஸ்ரீ ஆகிய 2 பேரையும் செங்கன்கொட்டாவூர் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
திருவிழாவிற்கு சென்ற தீபா நேற்று குடிசை வீட்டிற்குள் சென்று தனது குழந்தை நித்யஸ்ரீ மீதும், அவர் மீதும் மண்எண்ணை கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் தீ வீடு முழுவதும் பரவியதால் குடிசை வீடு தீப்பற்றி கொண்டது. அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த உறவினர்கள் திடீரென்று குடிசை வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். அங்கு தீபாவும், நித்யஸ்ரீயும் தீயில் கருகி அலறுவதை கண்டனர்.
2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தாயும், மகளும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று தீபா, நித்யஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபாவுக்கும், சோலைராஜனுக்கு இடையே குடும்பதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபா தனது குழந்தைக்கு தீவைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
குடும்ப பிரச்சனை காரணமாக தீபா தனது குழந்தை மீது தீவைத்து கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிசை வீடு தீப்பிடித்து இருவரும் இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஒ. சரவணன் விசாரணை நடத்தி வருகின்றார். திருவிழாவிற்காக வந்த தீபா தனது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X