search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிப்பதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
    X

    காதலிப்பதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

    ஆண்டிப்பட்டி அருகே காதலிப்பதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் நிதீஷ்குமார் (வயது21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த மைனர் பெண் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அடிக்கடி அங்கே சென்ற நிதீஷ்குமார் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

    மேலும் அடிக்கடி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சோதனை செய்து பார்த்தபோது 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து ராஜதானி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×