search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் சிகிச்சைக்கு வந்த ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு- டாக்டர் கைது
    X

    சேலத்தில் சிகிச்சைக்கு வந்த ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு- டாக்டர் கைது

    சேலத்தில் சிகிச்சைக்கு வந்த ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இவர் நேற்று நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு கிளினிக்குக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு டாக்டர் தமிழ்ச்செல்வன் (வயது 62) என்பவர் ஆசிரியைக்கு சிகிச்சை அளித்தார்.

    அப்போது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலிக்காக சிகிச்சை பெற்றீர்களே? இப்போது எப்படி இருக்கிறது? என்று ஆசிரியையிடம் கேட்டார். அதற்கு அவர் இப்போதும் லேசான வலி இருக்கிறது என்று கூறினார்.

    அப்போது டாக்டர் அவரை பரிசோதிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் நடந்ததை தனது கணவரிடம் தெரிவித்தார். மேலும் டாக்டர் பலமுறை போன்மூலம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஆசிரியை இது குறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி டாக்டரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட டாக்டர் அரசு டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கிளீனிக் நடத்தி வந்துள்ளார்.

    சிகிச்சைக்கு வந்த ஆசிரியருக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×