என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன்- ரூ.1 லட்சம் கொள்ளை
கும்பகோணம், மார்ச்.15-
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வலங்கைமான் ரோட்டில் உள்ள ராஜமீனா நகரில் வசித்து வருபவர் தொல்காப்பியன் (வயது 55). இவர் பட்டுக்கோட்டையில் மின்வாரிய உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (50). இவர் பருத்தி சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது 2-வது மகள் காவ்யாவும், பிரதீப் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இதனால் மகளையும், மருமகனையும் பார்ப் பதற்காக தொல்காப்பியன் தனது மனைவியுடன் கடந்த 10-ந்தேதி சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை அவர்கள் ஊருக்கு திரும்பினர்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தொல்காப்பியன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. பின்னர் மாடி வீட்டுக்கு சென்று அவர் பார்த்த போது, அங்கும் பீரோவில் இருந்த 38 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
பூட்டி கிடந்த வீட்டை மர்ம கும்பல் நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. திருட்டுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
இந்த கொள்ள சம்பவம் பற்றி நாச்சியார் கோவில் போலீசில் தொல்காப்பியன் புகார் செய்தார். திருவிடைமருதூர் போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுனர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன், மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போன சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது. * * * கொள்ளை நடந்த மின்வாரிய அதிகாரி வீட்டை படத்தில் காணலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்