search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்படுகிறது- அர்ஜூன் சம்பத் பேச்சு
    X

    அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்படுகிறது- அர்ஜூன் சம்பத் பேச்சு

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியுள்ளார். #arjunsampath #admkgovt
    தென்காசி:

    இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் தென்காசிக்கு வந்தார். தென்காசி மலையான்தெருவில் உள்ள மறைந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.குமார்பாண்டியன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சக்திபாண்டியன் தலைமை தாங்கினார்.  சேகர்பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:- 

    பாராளுமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.  தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தோல்வி கூட்டணி ஆகும். தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. 

    மோடி பிரதமர் ஆன பிறகு தான் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவித்தார்கள். இப்போது தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொன்னுச்சாமி, மாநில இளைஞரணி செயலாளர் ஓம்கார பாலாஜி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஹரி, தென்காசி பா.ஜ.க. தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி, பா.ஜ.க. மேலிட பார்வையாளர் தென்காசி ராஜ்குமார், 32-வது வார்டு பா.ஜ.க. தலைவர் இசக்கிமுத்து, தென்காசி நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  #arjunsampath #admkgovt
    Next Story
    ×