search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி லிக்கிதா
    X
    மாணவி லிக்கிதா

    நுரையீரல் பாதிப்பால் மூளைச்சாவு - திருப்பதி மாணவி உடல் உறுப்பு தானம்

    வேலூர் ஆஸ்பத்திரியில் நுரையீரல் பாதிப்பால் மூளைச்சாவு அடைந்த மாணவி உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பதி ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சைலஜா, மகள்கள் லிக்கிதா (வயது 12), மகிதா (9) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    7-ம் வகுப்பு படித்து வந்த லிக்கிதாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மோசமானது. இதனையடுத்து அவரை வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இன்று காலை 8 மணிக்கு லிக்கிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களது பெற்றோர் முன் வந்தனர். லிக்கிதாவின் கண்கள், கிட்னி, இதயம் ஆகியவை வேலூர் சி.எம்.சி., சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கு தானமாக பெறப்பட்டது. #tamilnews

    Next Story
    ×