search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்- ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு
    X

    திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்- ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் முறையிட்டுள்ளார். #ThiruparankundramElection #MadrasHC
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது வக்கீல் அருண் ஆஜராகி திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து என் கட்சிக்காரரான தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தீர்கள். இந்த நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

    இந்த வழக்கை காரணம் கூறி, ஐகோர்ட் மீது பொறுப்பினை சுமத்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதி, தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே போஸ் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்து விட்டார். அதனால் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதும், அதற்கு விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #ThiruparankundramElection #MadrasHC
    Next Story
    ×