search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மின்சார ரெயில் தாமதமாக வந்ததால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகை
    X

    சென்னை மின்சார ரெயில் தாமதமாக வந்ததால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகள் முற்றுகை

    அரக்கோணத்தில் ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் ரெயில்நிலைய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்தனர்.

    அரக்கோணம்:

    திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு தினமும் காலை 7 மணிக்கு மின்சார ரெயில் சென்றுவருகிறது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில்நிலையத்திற்கு 7 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    இன்று 7 மணிக்கு வழக்கமாக வரவேண்டிய பாசஞ்சர் ரெயில் 7,15 மணிக்கு வந்தது. 15 நிமிடம் காலதாமதமாக வந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றதால் பாசஞ்சர் ரெயிலை மேலும் 30 நிமிடங்கள் இயக்கபடாமல் நிறுத்தி வைக்கபட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில்நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். நிலைய அதிகாரி மற்றும் ரெயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகள் நாங்கள் தினமும் சென்னைக்கு வேலைக்கு செல்லும்போது அடிக்கடி ரெயில்தாமதமாக செல்கிறது. இதனால் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே ரெயில் காலதாமதத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் ரெயில்காலதாமதத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறோம். இனி இது போல் காலதாமதம் நடக்காது என்று உறிதியளித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×