என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்3 March 2019 2:51 PM GMT (Updated: 3 March 2019 2:51 PM GMT)
பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குன்னம்:
அரியலூர் மாவட்டம் அயன்தத்தனூர் காலனி தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி குன்னம் கீழ பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதி அத்தியூர் காலனி தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 17). இவர் அந்த பள்ளியில் படித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் திணேஷ்குமார் தற்போது படிக்காமல் வீட்டில் உள்ளார்.
சம்பவத்தன்று பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு செல்ல கீழபெரம்பலூர் பஸ்நிறுத்ததில் மாணவி நின்றார். அப்போது அங்கு வந்த தினேஷ்குமார் உன் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறி அவரை அழைத்து சென்று, வசிஸ்டபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று குன்னம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்த போது தினேஷ்குமாரின் உறவினர் வீட்டில் மாணவி இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X