search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய தாமரை தீபம் ஏற்றிய பெண்கள்
    X

    கோவை அருகே மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய தாமரை தீபம் ஏற்றிய பெண்கள்

    கோவை அருகே இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி அமைய வேண்டும் என்று பெண்கள் தாமரை தீபம் ஏற்றினர். #bjp #pmmodi

    கவுண்டம்பாளையம்:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம் பாளையம் அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் தாமரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 அடி நீளத்தில் தாமரை போன்று கோலம் இட்டு அதன்மீது பாரதிய ஜனதா கட்சியின் கலர் போல அமைத்து சுற்றிலும் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் பெண்கள், தனியார் கல்லூரி மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கைகளில் திருவிளக்கு ஏற்றிக்கொண்டனர். கையில் தீபம் ஏற்றியவர்கள் இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடியின் ஆட்சி அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கோ‌ஷங்கள் இட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட மகளீர் அணி தலைவி கீதா வசந்த் தலைமை தாங்கினார். 

    மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், ரத்தினம் குரூப் தாளாளர் ஷீமா செந்தில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் வாசுகி, பி.எம்.என்.டிரஸ்ட் விக்னேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வட்சலா, விஜயா ரவி, ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன், பாக்கியலட்சுமி, கண்ணன் தேவராஜ், மண்டல தலைவிகள் நதியா, ஜிவிதா, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #bjp #pmmodi

    Next Story
    ×