என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பேஸ்புக்’ பழக்கத்தால் வலையில் விழுந்த மாணவிகள் - ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலிடம் சிக்கிய 50 பெண்கள்
Byமாலை மலர்26 Feb 2019 11:13 AM GMT (Updated: 26 Feb 2019 11:13 AM GMT)
கோவையில் பேஸ்புக் மூலம் பழகி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைதான 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை:
கோவை பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர் சபரிராஜன்(வயது 25). என்ஜினீயர்.
இவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் அப்பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று மாணவிக்கு போன் செய்த சபரிராஜன் சுற்றுலா செல்லலாம் என ஆசை காட்டி ஊஞ்சவேலம்பட்டி பகுதிக்கு அழைத்தார். இதை நம்பி மாணவி அவருடன் காரில் சென்றார்.
காரில் சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதிஷ்(28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார்(24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) ஆகியோர் இருந்தனர். தாராபுரம் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சபரிராஜன் மாணவியின் சுடிதாரை விலக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட, அதை சதிஷ் செல்போனில் வீடியோவில் படம் பிடித்தார்.
அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் ஆவேசமடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்துக் கொண்டு, மாணவியை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர்.
இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சபரிராஜன் உள்பட 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இக்கும்பல் சமீபத்தில் வெளியான ‘அடங்க மறு’ சினிமா போன்று அழகான இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்து பழக்கம் ஏற்படுத்தி, தனியாக வரவழைத்து ‘குரூப்’பாக சேர்ந்தும், தனித்தனியாகவும் சில்மிஷத்தில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
பேஸ்புக்கில் பழக்கமாகும் மாணவிகள், இளம் பெண்களின் செல்போன் நம்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை திருநாவுக்கரசு செய்து வந்துள்ளார். அந்த நம்பரில் சபரிராஜன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் பேசி பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.
இவர்களிடம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் சிக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.
முதல்முறையாக மாணவி புகார் கொடுத்ததால் இந்த கும்பல் சிக்கி உள்ளது. புகார் கொடுத்த மாணவிக்கு போதிய பாதுகாப்பு செய்து கொடுத்த போலீசார், இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
கோவை பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர் சபரிராஜன்(வயது 25). என்ஜினீயர்.
இவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் அப்பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று மாணவிக்கு போன் செய்த சபரிராஜன் சுற்றுலா செல்லலாம் என ஆசை காட்டி ஊஞ்சவேலம்பட்டி பகுதிக்கு அழைத்தார். இதை நம்பி மாணவி அவருடன் காரில் சென்றார்.
காரில் சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதிஷ்(28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார்(24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) ஆகியோர் இருந்தனர். தாராபுரம் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சபரிராஜன் மாணவியின் சுடிதாரை விலக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட, அதை சதிஷ் செல்போனில் வீடியோவில் படம் பிடித்தார்.
அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் ஆவேசமடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்துக் கொண்டு, மாணவியை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர்.
இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சபரிராஜன் உள்பட 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இக்கும்பல் சமீபத்தில் வெளியான ‘அடங்க மறு’ சினிமா போன்று அழகான இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்து பழக்கம் ஏற்படுத்தி, தனியாக வரவழைத்து ‘குரூப்’பாக சேர்ந்தும், தனித்தனியாகவும் சில்மிஷத்தில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
பேஸ்புக்கில் பழக்கமாகும் மாணவிகள், இளம் பெண்களின் செல்போன் நம்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை திருநாவுக்கரசு செய்து வந்துள்ளார். அந்த நம்பரில் சபரிராஜன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் பேசி பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.
இவர்களிடம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் சிக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.
முதல்முறையாக மாணவி புகார் கொடுத்ததால் இந்த கும்பல் சிக்கி உள்ளது. புகார் கொடுத்த மாணவிக்கு போதிய பாதுகாப்பு செய்து கொடுத்த போலீசார், இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X