search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த கார் தீ பிடித்தது - வியாபாரி பலி
    X

    திருமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த கார் தீ பிடித்தது - வியாபாரி பலி

    திருமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த கார் தீ பிடித்ததில் வியாபாரி பலியானார்.

    பேரையூர்:

    நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் (வயது 59). கருவாடு வியாபாரி. இவர் நேற்று நாமக்கல் செல்வதற்காக காரில் புறப்பட்டார். கன்னியாகுமரி அருகே உள்ள ஆலங்கோட்டையைச் சேர்ந்த மோகன் மகன் சதீஷ் காரை ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் 4 வழிச்சாலையில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது.

    அதே வேகத்தில் அங்குள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து உருண்டது. இதில் கார் தீ பிடித்தது.

    இந்த விபத்தில் வியாபாரி ஜெலஸ்டின் காயம் அடைந்தும், தீயில் கருகியும் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் சதீஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×