என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்- வாலிபர் கைது
தேனி:
தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் தேனியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதேமில்லில் வேலை பார்த்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தும்மலப்பட்டியை சேர்ந்த வித்யா(வயது21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் காதலாக மாறி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.
பின்னர் ராஜேஷ் தனக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதை மறைத்து வித்யாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் சொந்தஊருக்கு வித்யாவுடன் சென்றபோது அவரின் மனைவி மற்றும் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
வித்யா இதனை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ் 2 பேரும் சேர்ந்து வாழுங்கள். இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்