search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்- வாலிபர் கைது
    X

    தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்- வாலிபர் கைது

    தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் தேனியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதேமில்லில் வேலை பார்த்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தும்மலப்பட்டியை சேர்ந்த வித்யா(வயது21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் காதலாக மாறி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.

    பின்னர் ராஜேஷ் தனக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதை மறைத்து வித்யாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் சொந்தஊருக்கு வித்யாவுடன் சென்றபோது அவரின் மனைவி மற்றும் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

    வித்யா இதனை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ் 2 பேரும் சேர்ந்து வாழுங்கள். இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    Next Story
    ×