search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியாளர்கள் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக உள்ளனர்- கே.என்.நேரு குற்றச்சாட்டு
    X

    ஆட்சியாளர்கள் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக உள்ளனர்- கே.என்.நேரு குற்றச்சாட்டு

    ஆட்சியாளர்கள் செய்யாத வேலைகளை செய்ததாக கணக்கு காட்டி வருமானம் பார்ப்பதில் தான் கவனமாக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு குற்றம் சாட்டியுள்ளார். #knnehru #dmk
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி, மருவத்தூர் ஊராட்சி அம்மம்பாளையம், முருகூர், வீரமச்சான்பட்டி ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மக்களுக்காக செயல்படவில்லை. அமைச்சர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் செயல்படுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் பலமுறை மக்கள் நலன் கருதி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்க வில்லை.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றியிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க. தோல்வி அடைந்துவிடும் என்ற பயத்தால் தேர்தலை நடத்தவிடாமல் செய்து வருகின்றனர். இதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  தொகுதி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள ஆட்சியாளர்கள் செய்யாத வேலைகளை செய்ததாக கணக்கு காட்டி வருமானம் பார்ப்பதில் தான் கவனமாக உள்ளனர். வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×