என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட சூப்பர் மூன் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல்:
உலகின் பல்வேறு நாடுகளில் சூப்பர் மூன் என்றழைக்கப்படும் மிகப் பெரிய நிலவு வானில் தோன்றியது. இந்த நிலவை கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு பரவசமடைந்தனர்.
பூமிக்கு அருகில் தோன்றும் இந்த நிலவை சாதாரண கண்களால் காணலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமான நிலவின் அளவில் இருந்து 14 சதவீதம் பெரியதாகவும், 38 மடங்கு அதிக ஒளியுடனும் பளிச்சென்று இந்த நிலவு தோன்றியது. இந்த நிலவை உலகின் பல்வேறு நாடுகளில் கண்டு ரசித்தனர்.
இது குறித்து கொடைக்கானல் வானியல் மைய விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவிக்கையில், பின் பனிக்காலத்தில் இந்த ஆண்டின் மிகப் பெரிய நிலவு நேற்று மாலை வானில் தென்பட்டது. சாதாரண நாட்களில் காணப்படும் நிலவை விட அளவில் பெரியதாகவும், அதிக ஒளியுடனும் இருப்பதால் இதனை பனி நிலவு என்றும் அழைப்பதுண்டு.
அடுத்த முறை இது போன்ற நிலவு 2026-ம் ஆண்டில் மட்டுமே காண முடியும். கொடைக்கானலில் இந்த நிலவை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு உற்சாகமடைந்தனர் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்