search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார்- கவிஞர் சினேகன்
    X

    காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார்- கவிஞர் சினேகன்

    தி.மு.க.வை விட்டு வெளியே வந்தால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் சினேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட நினைத்தது. ஆனால் மக்கள் நீதி மய்யம் நினைத்தது நடக்கவில்லை. எதிர்பார்த்தவாறு கூட்டணி அமையவில்லை.

    தற்போதும் தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம்.

    பா.ஜ.க.வோடு காங்கிரஸ் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் ஊழல் கட்சி கிடையாது. தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர் டி.டி.வி. தினகரன். அவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளி வந்து கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி எந்த பயனையும் தராது.

    பா.ஜ.க.வை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. கோபத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க. எதிர்ப்பு நிலை.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
    Next Story
    ×