search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பிதுரை என் சகோதரர் - கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    தம்பிதுரை என் சகோதரர் - கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

    தம்பிதுரை என் சகோதரர், கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #ThambiDurai
    பீளமேடு:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது-

    சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது தேர்தல் வந்துவிட்டது என்பதை காட்டுகிறது. தேர்தல் வரும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கை.

    ஆஸ்திரேலிய பறவை சீசன் சமயத்தில் வனத்தை தேடி வரும் சீசன் முடிந்ததும் போய் விடும். அதுபோல் தான் நாராயணசாமி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பது ஆகும். இதுவும் தேர்தலுக்கான அறிகுறியே.

    மத்திய அரசு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறது. அமித்ஷா வருகை தமிழக மக்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    அவரிடம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜனதாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவரது கருத்துக்கள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கும்போது, தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் யாரோடும் கிடையாது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும் என அகில இந்திய பொது செயலாளர் முரளிதரராவ் கூறி இருப்பது சரியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்கள் காலில் விழுகிறது என கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளிக்கும்போது, விழுந்தவர்கள் பலம் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு தூணோடு இன்னொரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால் அது பலமில்லை என்றார்.

    பின்னர் அவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #PonRadhakrishnan #ThambiDurai


    Next Story
    ×