search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும்- தினகரன் பேச்சு
    X

    பாராளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும்- தினகரன் பேச்சு

    வருகிற பாராளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று தினகரன் பேசினார். #dinakaran #parliamentelection #assemblyelection

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம், அம்மனூர், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.ம.மு.க. சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில், சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியும், துரோக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வினரை தோற்கடியுங்கள்.

    விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் அ.ம.மு.க.வை ஆதரித்து வாக்களியுங்கள்.

    அப்போதுதான், ஜெயலலிதாவின் மக்கள் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.பி. கோபால், வேலூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் என்.ஜி.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #assemblyelection

    Next Story
    ×