search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து இருசக்கரவாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கவர்னர் கிரண்பேடி
    X
    ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து இருசக்கரவாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கவர்னர் கிரண்பேடி

    ஹெல்மெட் அணிந்து செல்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கவர்னர் கிரண்பேடி

    புதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதின் அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். #KiranBedi #Helmet
    புதுச்சேரி:

    புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    அவர் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் பகுதிக்கு சென்றார். மூலக்குளம் அருகே சென்ற போது அவர் தனது காரில் இருந்து இறங்கினார். பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி, ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அது உங்கள் உயிரை பாதுகாக்கும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி, கருவடிக்குப்பம் வழியாக கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

    புதுவை அமைதியான, தூய்மையான மாநிலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போக்குவரத்து குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மதிப்பதில்லை.

    மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வது, வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. அதுபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதும் குற்றம்தான். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதால் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஒருவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

    குழந்தைகள் பெற்றோரின்றி தவிக்கின்றனர். விபத்து வழக்கிற்கான கோர்ட்டுக்கு செல்லும்போது நேரம், பணம் வீணாகிறது. விபத்தால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு விதவை பென்‌ஷன் வழங்குவது மூலம் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மருத்துவ செலவும் ஏற்படுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கூட வாகன விபத்தில் உயிரிழந்தார். அதுகூட ஹெல்மெட் அணியாதது தான் காரணம். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    அவ்வாறு அணியாமல் செல்வோர் மீது போக்குவரத்து போலீசார், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள் வாகன எண்ணை குறித்து வைத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது, திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கை செய்து விடமுடியுமா? அதுபோல் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வெறுமனே விடமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #KiranBedi #Helmet
    Next Story
    ×