என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர் அடித்துக்கொலை - தம்பி ஆத்திரம்
தூத்துக்குட:
தூத்துக்குடி மகிழ்ச்சி புரத்தை சேர்ந்தவர் சிவமுருகன் (வயது38). இவர் தமழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் ஆபிரகாம் லிங்கம் (33). டிரைவராக வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி திரிந்தார்.
நேற்று சிவமுருகனுக்கும், ஆபிரகாம் லிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த ஆபிரகாம் லிங்கம், அண்ணன் சிவமுருகனை சரமாரியாக தாக்கினார். மேலும் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தலையில் அடித்தார். இதில் சிவமுருகனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிவமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து ஆபிரகாம் லிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடிபோதையில் அண்ணனை தம்பியே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்