search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துடியலூர் மகளிர் போலீசில் தாயின் 2-வது கணவர் மீது பாலியல் புகார் கூறிய சிறுமி
    X

    துடியலூர் மகளிர் போலீசில் தாயின் 2-வது கணவர் மீது பாலியல் புகார் கூறிய சிறுமி

    தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தாயின் 2-வது கணவர் மீது சிறுமி கோவை துடியலூர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் 15 வயது சிறுமி புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தாய்க்கு 2 கணவர்கள். தாய், 2 தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறேன். எனது 2-வது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து எனது அம்மாவிடம் கூறியபோது அவர் 2-வது தந்தையை கண்டித்தார். இருந்தாலும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நான் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு போனில் தொடர்பு கொண்டு கூறினேன். அதிகாரிகள் எனது அம்மாவிடம் விசாரணை நடத்தினர். எனது பிறந்த தேதி, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை பெற்றுச்சென்றனர்.

    எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×