என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானலில் பாலியல் தொந்தரவால் கேரள பெண் தற்கொலை
கொடைக்கானல்:
கொடைக்கானல் மாப்பிள்ளை முதலியார் தெருவைச் சேர்ந்த சாஜ் மனைவி ரோகினி (வயது 40). இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். கணவரும் முத்த மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ரோகினியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் அக்கம் பக்கத்தில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அடிக்கடி செல்போனில் ரோகினியிடம் தவறான முறையில் பேசி வந்தார். கணவர் வெளியூரில் வசிப்பதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி தொந்தரவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
ரோகினி தனது அறையில் கைப்பட மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் தனது சாவுக்கு ஜெயசீலன்தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். எனவே ஜெயசீலன் பாலியல் தொந்தரவு செய்ததால் அவர் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்