search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமானத்தில் ரூ.34 லட்சம் தங்கம் கடத்தல்
    X

    சென்னை விமானத்தில் ரூ.34 லட்சம் தங்கம் கடத்தல்

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport

    ஆலந்தூர், பிப். 8-

    சென்னை சர்வதேச விமான நிலைய முனையத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியின் மீது கருப்பு நிற பார்சல் ஒன்று இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள்.

    அந்த பார்சலில் 1 கிலோ தங்க கட்டி இருந்தது. இதன் மதிப்பு ரூ.34 லட்சம் ஆகும். விசாரணையில் அந்த தங்க கட்டிகள் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து சி.சி.டி.வி.கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்தர்பால் என்பவர் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் அதை கழிவறை யில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. இது தொடர் பாக இந்தர்பாலை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×