என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னை விமானத்தில் ரூ.34 லட்சம் தங்கம் கடத்தல்
ஆலந்தூர், பிப். 8-
சென்னை சர்வதேச விமான நிலைய முனையத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியின் மீது கருப்பு நிற பார்சல் ஒன்று இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள்.
அந்த பார்சலில் 1 கிலோ தங்க கட்டி இருந்தது. இதன் மதிப்பு ரூ.34 லட்சம் ஆகும். விசாரணையில் அந்த தங்க கட்டிகள் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சி.சி.டி.வி.கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்தர்பால் என்பவர் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் அதை கழிவறை யில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. இது தொடர் பாக இந்தர்பாலை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்