search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேர்க்க மறுத்த கணவர் வீட்டு முன்பு மனைவி ‘தர்ணா’ போராட்டம்
    X

    சேர்க்க மறுத்த கணவர் வீட்டு முன்பு மனைவி ‘தர்ணா’ போராட்டம்

    அம்பத்தூரில் கணவர் வீட்டில் சேர்க்க மறுத்ததால் அவரது வீட்டு முன்பு மனைவி கைக்குழந்தையுடன் ‘தர்ணா’ போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அம்பத்தூர்:

    மேற்கு முகப்பேர் தச்சு தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (35). இவருடைய மனைவி பிரணிதா (32). இவர்களுக்கு ரோகித் என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது.

    பிரணிதா ஒரு வாரத்துக்கு முன்பு அம்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இன்று குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு திரும்பினார்.

    பிரணிதாவை கொண்டு விடுவதற்காக அவருடைய தந்தை பாலகண்ணன் உடன் வந்தார். ஆனால், கணவர் தினேசும், வீட்டில் இருந்தவர்களும் பிரணிதாவை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதனால் பிரணிதா கைக்குழந்தை ரோகித்துடன் கணவர் வீட்டின் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய தந்தை அங்கு நின்று கொண்டிருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கணவன் - மனைவியை சமசரம் செய்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×