என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்
Byமாலை மலர்4 Feb 2019 5:30 AM GMT (Updated: 4 Feb 2019 5:31 AM GMT)
குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1½ டன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.
காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood
வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.
காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X