என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா, செல்போன்கள் சிக்கியது
மதுரை:
மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், செல்போன், பீடிக்கட்டுகள் தாராளமாக கிடைப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் திலகர் திடல் உதவி ஆணையர் வெற்றிசெல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 6 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர்.
அங்கு கைதிகளின் அறைகள், சமையல்கூடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
அப்போது கைதிகள் மறைத்து வைத்து இருந்த கஞ்சா, செல்போன், பீடிக்கட்டுகள் ஆகியவை சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் தாராளமாக கிடைப்பது சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
மதுரை மத்திய ஜெயிலுக்கு வரும் உறவினர்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இத்தகையநிலையில் கைதிகளுக்கு போதைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவை எப்படி கிடைத்தது? என்று தெரியவில்லை.
இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் சோதனையில் பிடிபட்ட கைதிகளிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்