search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 162 கிராம் தங்கம் பறிமுதல்
    X

    மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 162 கிராம் தங்கம் பறிமுதல்

    மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 162 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க நவீன ஸ்கேன் கருவிகள் வைக்கப்பட்டிருந்த போதும் கடத்தல்காரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது மலேசியாவைச் சேர்ந்த ரமாஸ்ரீ துரைசாமி என்பவரது நடவடிக்கையில் சந்தேம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை போட்டனர். இதில் அவர் தனது உடமைகளில் 162 கிராம் எடை கொண்ட ரூ.5.14 லட்சம் மதிப்புள்ள ஆறு தங்க வளையல்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #TrichyAirport
    Next Story
    ×