search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களே தி.மு.க.வை வழிநடத்துகின்றனர்- தம்பிதுரை பேட்டி
    X

    அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களே தி.மு.க.வை வழிநடத்துகின்றனர்- தம்பிதுரை பேட்டி

    சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர் என்று தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #parliamentelection #admk #mkstalin

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் எப்படியாவது முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர் ஊராக சென்று ஊராட்சி கூட்டம் நடத்தி வருகிறார்.

    இதனால் அவரது முதல்வர் கனவு நிறைவேறப் போவதில்லை. தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே.

    சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர். ஏனெனில் அந்த கட்சியில் அதுபோன்ற தலைவர்கள் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

    மேகதாது அணை விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து அவையை முடக்கினோம். ஆனால் எங்களுக்கு ஆதரவாக எந்தஒருகட்சியும் குரல் எழுப்பவில்லை.

    தமிழக மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் பிரச்சினை போன்றவற்றுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மட்டுமே காவிரி பிரச்சினையை தீர்க்க முடியும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே அதிக இடங்களை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliamentelection #admk #mkstalin

    Next Story
    ×