என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்- ராகுல்காந்தி அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் வரவேற்பு
Byமாலை மலர்30 Jan 2019 9:20 AM GMT (Updated: 30 Jan 2019 9:20 AM GMT)
இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. #VCK #Thirumavalavan #Rahulgandhi
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் ஏற்கனவே பின்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குடும்பம் ஒன்றுக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்குவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரித்து அளித்துள்ளார் . இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் அறிக்கையே ஆதாரமாகும்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிமக்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம் என 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தது போல அண்டப்புளுகு அறிவிப்பு அல்ல ராகுல் காந்தியின் அறிவிப்பு. அது நேரு காலம் முதல் ஏழை எளிய மக்களின் பால் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு .
இதுவரை விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பொதுவாக முன்வைக்கப்பட்டு வந்தது. அப்படி கடன் தள்ளுபடி செய்யும் போது அதனால் நிலமற்ற கூலி விவசாயிகள் எந்தப் பயனையும் அடைய முடியவில்லை.
விவசாய வேலை நாட்கள் குறைந்து கொண்டே வருவதால், விவசாயம் செய்யப்படாத காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.
இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து இரண்டு முறை கோரிக்கை மனுவும் அளித்திருக்கிறோம். இந்நிலையில் ராகுல் காந்தியின் அறிவிப்பு எங்களது கோரிக்கையை அனைத்து மக்களுக்கும் விரிவு படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VCK #Thirumavalavan #congress #Rahulgandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X