search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே திருமண ஆசை காட்டி ஆசிரியையை பலாத்காரம் செய்த ஆசிரியர்
    X

    திண்டுக்கல் அருகே திருமண ஆசை காட்டி ஆசிரியையை பலாத்காரம் செய்த ஆசிரியர்

    திண்டுக்கல் அருகே திருமண ஆசை காட்டி ஆசிரியையை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நத்தத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    அந்த பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டம் மினாத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    அப்போது விக்னேஷ்வரன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய ஆசிரியையை பாலில் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது திருமணத்திற்கு ஆசிரியை வற்புறுத்தியபோது விக்னேஷ்வரன் மறுத்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர்.

    Next Story
    ×