search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் நெருக்கடியால் என் மீது வழக்கு போடுவதா?- தமிழக அரசுக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்
    X

    மத்திய அரசின் நெருக்கடியால் என் மீது வழக்கு போடுவதா?- தமிழக அரசுக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்

    மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian
    மன்னார்குடி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் பிரதமர் மோடியை மதுரையில் சந்திக்க உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் சார்பில் கண்டனத்தை நேரிலும், கடிதம் மூலமும் தெரிவிக்க வேண்டும்.

    கோதாவரி-காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய மந்திரி நிதின்கட்கரி சதி செயலில் ஈடுபடுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 2017-18-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    நாகை மாவட்டத்தில் போலீசார் அனுமதித்த இடங்களில் தான் அவர்களின் முழு பாதுகாப்போடு போக்குவரத்து பாதிப்பின்றி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எதிர்ப்பு பிரசாரம் செய்தோம். இந்த நிலையில் வேதாரண்யம் பகுதிகளில் 4 போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

    நாளை குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovt
    Next Story
    ×