என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடநாடு விவகாரம்- திமுக போராட்டம் தொடரும்: முக ஸ்டாலின்
Byமாலை மலர்25 Jan 2019 5:00 AM GMT (Updated: 25 Jan 2019 5:00 AM GMT)
கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #KodanadEstate #DMK #MKStalin
சென்னை:
கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் அறித்த பேட்டி வருமாறு:-
கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆதாரங்களோடு இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அவரிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம்.
4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த மனு இருந்தது. இதில் ஒன்று குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற எடப்பாடி பழனிசாமியை உடனடியாக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் நீக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான, முறையான விசாரணை நடைபெறும்.
அடுத்து, கவர்னர் உடனடியாக இந்திய ஜனாதிபதியிடம் நேரடியாக இதுபற்றி விளக்கிச் சொல்லி அவர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.
நான்காவதாக மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்தும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால், இதுவரை கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று செய்திகள் வரவில்லை. எனவே, தி.மு.க. சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது போலியானது. இதற்கு முதல்- அமைச்சர் சொல்லும் பதிலை ஊடகங்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்கள், முதல்- அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசு பின்னால் இருந்து கொண்டு இவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்றாலும் நாங்கள் இதை விடப்போவதில்லை. தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin
கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் அறித்த பேட்டி வருமாறு:-
கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆதாரங்களோடு இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அவரிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம்.
4 முக்கியமான கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த மனு இருந்தது. இதில் ஒன்று குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற எடப்பாடி பழனிசாமியை உடனடியாக முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் நீக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான, முறையான விசாரணை நடைபெறும்.
அடுத்து, கவர்னர் உடனடியாக இந்திய ஜனாதிபதியிடம் நேரடியாக இதுபற்றி விளக்கிச் சொல்லி அவர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.
நான்காவதாக மர்மமான முறையில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்தும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால், இதுவரை கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று செய்திகள் வரவில்லை. எனவே, தி.மு.க. சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது போலியானது. இதற்கு முதல்- அமைச்சர் சொல்லும் பதிலை ஊடகங்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்கள், முதல்- அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசு பின்னால் இருந்து கொண்டு இவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்றாலும் நாங்கள் இதை விடப்போவதில்லை. தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X