என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே விபத்து - பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
கோவை:
கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் மனோ. இவரது மகன் டேனியல்(வயது 15) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருடைய நண்பரான அதேபகுதியை சேர்ந்த தரணீஸ்வரன்(14) 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு இவர்கள் இருவரும் மொபட்டில் வீர கேரளத்தில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். டேனியல் மொபட்டை ஓட்ட தரணீஸ்வரன் பின்னால் அமர்ந்திருந்தார். வேடப்பட்டி- வீரகேரளம் சாலையில் உள்ள ஒரு பால் பண்ணை அருகே சென்ற போது எதிரே வந்த கார் இவர்களது மொபட் மீது வேகமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தரணீஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
விபத்து நடந்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே அங்கு திரண்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து, காரை அடித்து உடைத்து தலை குப்புற கவிழ்த்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய காரை கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்