search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது
    X

    அரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது

    அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்றிரவு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 30 மற்றும் 26 வயதில் 2 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பெண்களையும் மீட்டு அரக்கோணம் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் லாட்ஜில் விபச்சாரம் நடத்தியதற்காக லாட்ஜ் உரிமையாளர் கும்மினிபேட்டையை சேர்ந்த நரசிம்மலு (வயது 46). மேலாளர் சந்திரபாபு (60). 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×