என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரெட்டியார்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது23). வேலை ஏதும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றி திரிந்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இதுபற்றிய தகவலின் அடிப்படையில் புதுவை குழந்தைகள் நல குழுவினர் அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவியை செல்வராஜ் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்