என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராம சபை கூட்டத்தை நாடகம் போல் முக ஸ்டாலின் நடத்தி வருகிறார்- வைத்திலிங்கம் எம்பி
Byமாலை மலர்11 Jan 2019 10:05 AM GMT (Updated: 11 Jan 2019 10:05 AM GMT)
பாராளுமன்ற தேர்தலுக்காக கிராம சபை கூட்டத்தை நாடகம் போல் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். #Vaithilingam #MKStalin
தஞ்சாவூர்:
தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம். அதன்படிதான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.
மக்கள் எல்லோரும் பயன் பெற வேண்டிய திட்டத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதற்குப் பிறகு வழங்கப்படும்.
கிராமசபை கூட்டம் ஜெயலலிதா காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அடிப்படைத் தேவைகளைக் கேட்டு அவற்றை பூர்த்தி செய்தார்கள்.
இன்னும் மூன்று மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது ஒரு நாடகம் போல் நடத்திக் கொண்டிருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பயன்பெறுவதற்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல் செய்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நிதி நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Vaithilingam #MKStalin
தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம். அதன்படிதான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.
மக்கள் எல்லோரும் பயன் பெற வேண்டிய திட்டத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதற்குப் பிறகு வழங்கப்படும்.
கிராமசபை கூட்டம் ஜெயலலிதா காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அடிப்படைத் தேவைகளைக் கேட்டு அவற்றை பூர்த்தி செய்தார்கள்.
இன்னும் மூன்று மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது ஒரு நாடகம் போல் நடத்திக் கொண்டிருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பயன்பெறுவதற்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல் செய்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நிதி நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Vaithilingam #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X