search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது- துரைமுருகன்
    X

    அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது- துரைமுருகன்

    அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்று ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan
    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த லக்காபுரத்தில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பதில்லை. எதிர்கட்சியும் இதே தவறை செய்ய கூடாது என்பதற்காகத்தான் மக்களை திமுக நேரில் சந்தித்து வருகிறது.

    தற்போது மக்கள் தெரிவித்துள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சந்திப்பது தான் மகத்தான சக்தி. மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது. பக்திமான்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடியது. கலைநயம் படைத்த சிலைகள் திருடப்படுவது அவமான செயல். நீதிமன்றம் தெரிவித்த பிறகும் பொன்மாணிக்கவேலின் நேர்மையை அரசு சோதிப்பது வேடிக்கையானது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பு குறித்து சி.பி.ஐ விசாரித்திருந்தால் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே எவ்வித பாகுபாடும் ஏற்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan
    Next Story
    ×