search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10ம் வகுப்பு படித்த  மீனவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
    X

    10ம் வகுப்பு படித்த மீனவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

    10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    கடலூர் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வேலைக்கான பயிற்சியும் 20 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
    Next Story
    ×