search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    எழும்பூரில் ரே‌சன் கடைக்கு புதிய கட்டிடம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    எழும்பூர் தொகுதி 58-வது வார்டில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ரேசன் கடை மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு விரைவில் மாற்றப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பதில் வருமாறு:-

    எழும்பூர் தொகுதி 58-வது வார்டு இ.கே.குரு தெருவில் சிந்தாமணி ரே‌சன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும் அதை சாமி தெருவில் உள்ள மாநகராட்சி புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் அந்த ரே‌சன் கடை அங்கு மாற்றப்படும்.

    சென்னை நகரில் பல்வேறு ரே‌சன் கடைகளை மாற்ற கோரிக்கைகள் வருகின்றன என்றாலும் இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அரசு இடமும் இல்லை. என்றாலும் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×