search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்குமார்
    X
    ராஜ்குமார்

    40 ஆண்டுகளுக்கு பின் கோவையில் பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் வாலிபர்

    40 ஆண்டுகளுக்கு முன் டென்மார்க் தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட வாலிபர் தற்போது கோவையில் தனது பெற்றோரை தேடி வருகிறார்.
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் லிங்கனூரை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஜ்குமார் என்று பெயர் சூட்டினர். கருத்து வேறுபாட்டால் தாய் பிரிந்து சென்றார். அய்யாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் ராஜ்குமார் ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    கோர்ட்டு முறைப்படி டென்மார்க் தம்பதியான கெல்ட்- பெர்த் ஆண்டர்சன் ஆகியோருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். ராஜ்குமார் கேஸ்பர் ஆண்டர்சனாக மாறினார்.

    டென்மார்க் அல்பர்க் நகரில் வசித்த ஆண்டர்சன் 40 வருடங்களுக்கு பின்னர் தன்னை பெற்றெடுத்த தாய்- தந்தையை பார்க்க கோவை வந்துள்ளார். கோவை வந்த அவர் சொந்த ஊரான லிங்கனூர் கருப்பராயன் கோவில் பகுதியில் விசாரித்து பார்த்தார். ஆனால் அவரால் பெற்றோர் மற்றும் உறவினர் குறித்த தகவலை சேகரிக்க முடியவில்லை. இதுகுறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உதவுமாறு கேட்டுள்ளார்.


    Next Story
    ×