search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கஞ்சா விற்ற 2 என்ஜீனியர்கள் கைது
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கஞ்சா விற்ற 2 என்ஜீனியர்கள் கைது

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கஞ்சா விற்ற 2 என்ஜீனியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திலீபன், பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதா இருவரும் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறி வைத்து அவர்களிடம் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×