search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு
    X

    ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு

    விழுப்புரம் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வீராமூர் ஏரியில் இன்று அதிகாலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் சிலர் அனுமதி பெறாமல் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போலீஸ் காரர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். அவர்கள் விலங்குகள் மீது துப்பாக்கிசூடு நடத்த மாட்டார்கள். இதில் 90 சதவீதம் போலீசார் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த பகுதியில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்ட வேட்டைக்காரர்களை கொண்டு துப்பாக்கியால் சுட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×