என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்- ஜிகே வாசன்
Byமாலை மலர்27 Dec 2018 9:23 AM GMT (Updated: 27 Dec 2018 9:23 AM GMT)
தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதை தமிழக அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
உண்ணாவிரதம் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.
மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தந்து வருங்கால நல்வாழ்கைக்கு வழி காட்டும் ஆசிரியர்களை ரோட்டுக்கு வரவழைத்து குடும்பத்தோடு போராடக்கூடிய நிலைக்கு தள்ளியது தமிழக அரசு தான். ஆசிரியர்களின் கல்விப்பணி அர்ப்பணிப்பான பணி.
எனவே ஆசிரியர்களின் கல்விப்பணிக்கு அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணி நியமனம், ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க வேண்டிய கடமை ஆளும் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
இனிமேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இப்பிரச்சனைக்கு நல்ல முடிவு ஏற்படுத்த நினைத்தால் தமிழக முதல்-அமைச்சர் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனே அழைத்து பேச்சுவார்த்தையில் நேரடியாக ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதை தமிழக அரசு முக்கியமாக கவனத்தில் கொண்டு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
உண்ணாவிரதம் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.
மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தந்து வருங்கால நல்வாழ்கைக்கு வழி காட்டும் ஆசிரியர்களை ரோட்டுக்கு வரவழைத்து குடும்பத்தோடு போராடக்கூடிய நிலைக்கு தள்ளியது தமிழக அரசு தான். ஆசிரியர்களின் கல்விப்பணி அர்ப்பணிப்பான பணி.
எனவே ஆசிரியர்களின் கல்விப்பணிக்கு அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணி நியமனம், ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க வேண்டிய கடமை ஆளும் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
இனிமேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இப்பிரச்சனைக்கு நல்ல முடிவு ஏற்படுத்த நினைத்தால் தமிழக முதல்-அமைச்சர் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனே அழைத்து பேச்சுவார்த்தையில் நேரடியாக ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X