search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை

    நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. #Rain

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் பெரும்பாலான அணைகள், குளங்கள் நிரம்பியிருந்தன. இந்த அணைகள், குளங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாவட்டத்தில் பல பகுதியில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. குறிப்பாக மணி முத்தாறு, நெல்லை, சேரன்மகாதேவி பகுதியில் கன மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம், பாபநாசம் மலைப் பகுதியில் பெய்த மழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகிய அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்டியது.

    தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஐயப்ப சீசன் என்பதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் வந்தனர். இதனால் கூட்டத்தை ஒழுங்கு படுத்த அருவிகளில் போலீசார் நிறுத்தப்பட்டனர். தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன. இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.87 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.30 அடியாகவும் உள்ளன. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1410 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் வருகிறது.

    பாபநாசம் அணையில் இருந்து 20 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 480 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகின்றன. பாபநாசம் கீழ் அணையில் இருந்து 856 கன அடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 79.40 அடியாகவும், ராமநதி அணை 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை 59.01 அடியாகவும், குண்டாறு அணை 32.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 29 அடியாகவும், நம்பியாறு அணை 12.74 அடியாகவும், கொடுமுடியாறு அணை 20.50 அடியாகவும், அடவிநயினார் அணை 73 அடி யாகவும் உள்ளன.

    Next Story
    ×