என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அற்புதம்மாள்
திருவாரூர்:
திருவாரூரில் தமிழர் தன்மான பேரவை சார்பில் நேற்று இரவு கருத் தரங்கம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில அரசியல் காரணங்களால் விடுதலை செய்யாமல் இருந்து வருகின்றனர். இதில் அரசை குறை கூட முடியாது. 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு, கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்த பிறகு கவர்னர் ஏன் கையெழுத்திட மறுத்து வருகிறார் என்று தெரிய வில்லை. 7 பேரும் சட்டத்தை மதித்து கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்