என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை: தலைமை ஆசிரியர் தப்பி ஓட்டம்
Byமாலை மலர்23 Dec 2018 8:34 AM GMT (Updated: 23 Dec 2018 8:34 AM GMT)
பள்ளி கழிவறையில் வைத்து 9-ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிளேஸ் பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை மாணவி பள்ளி நேரம் முடிந்ததும் வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றார். அப்போது தலைமை ஆசிரியர் பாஸ்கர் மாணவியை பின் தொடர்ந்து கழிவறைக்குள் சென்றார்.
அங்கு மாணவியை மிரட்டி ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். பள்ளி முடிந்த நேரம் என்பதால் மற்ற மாணவிகள் பள்ளியில் இல்லை. இதனால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் பற்றி உடனடியாக வெளியே தெரியவில்லை. பின்னர் தலைமை ஆசிரியர் பாஸ்கர், ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த மாணவியை மிரட்டி இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி அனுப்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லை குறித்து பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
‘செக்ஸ்’ தொல்லை புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் ஏற்கனவே கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு வேலூரில் உள்ள பள்ளியில் பணியாற்றியபோதும் இதேபோல் சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவரை இங்குள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்து இருந்தனர். தற்போது பாஸ்கர் மீண்டும் மாணவியிடம் தனது லீலையை தொடர்ந்து சிக்கி உள்ளார்.
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிளேஸ் பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை மாணவி பள்ளி நேரம் முடிந்ததும் வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றார். அப்போது தலைமை ஆசிரியர் பாஸ்கர் மாணவியை பின் தொடர்ந்து கழிவறைக்குள் சென்றார்.
அங்கு மாணவியை மிரட்டி ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். பள்ளி முடிந்த நேரம் என்பதால் மற்ற மாணவிகள் பள்ளியில் இல்லை. இதனால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் பற்றி உடனடியாக வெளியே தெரியவில்லை. பின்னர் தலைமை ஆசிரியர் பாஸ்கர், ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த மாணவியை மிரட்டி இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி அனுப்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லை குறித்து பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
‘செக்ஸ்’ தொல்லை புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் ஏற்கனவே கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு வேலூரில் உள்ள பள்ளியில் பணியாற்றியபோதும் இதேபோல் சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவரை இங்குள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்து இருந்தனர். தற்போது பாஸ்கர் மீண்டும் மாணவியிடம் தனது லீலையை தொடர்ந்து சிக்கி உள்ளார்.
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X