search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட கோமதி. கொலை செய்யப்பட்ட சரவணன்.
    X
    தற்கொலை செய்து கொண்ட கோமதி. கொலை செய்யப்பட்ட சரவணன்.

    திருச்சி அருகே மகனை கொன்று தாய் தற்கொலை

    குடும்ப தகராறில் மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர். முருகன் தனது குடும்பத்தினருடன் திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்றிரவு அவர் பணிக்கு சென்று விட்டார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்த போது சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×