என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்- அமைச்சர்கள் பேச்சு
கோவில்பட்டி:
விளாத்திகுளத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன் தாஸ் பாண்டியன் , மாவட்ட செயலாளர் சி.த. செல்லபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், மோகன், சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியதாவது:-
ஏழை,எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தந்தார். அதனால் தான் ஆண்ட கட்சிக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு தந்தார்கள். அவர் மறைவுக்குப் பின் சிலர் துரோகம் செய்து விட்டு சென்றதால் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
திருப்பரங்குன்றம், திருவாருர் தேர்தல் இயற்கையான தேர்தல், மற்ற 18 தொகுதிக்கான தேர்தல் செயற்கையான தேர்தல், மக்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரட்டை இலைக்கு தான் வாக்களித்தனர். வேட்பாளர்களை பார்த்து கிடையாது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகளை தி.மு.க. தாங்கி கொண்டு இருக்கும் நிலையில் உள்ளது. வரும் தேர்தல் எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளை சேர்த்து வீழ்த்தி அவர்களுக்கு ஒரு படிப்பினையை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், இந்த தேர்தல் அரசியல் மாற்றத்திற்க்கான தேர்தல். இதில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட கூடிய தேர்தல். அ.தி.மு.க. கூட்டணி பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணிகளை பார்த்து வருகிறது. அ.தி.மு.க தனித்து நிற்க தயார், தி.மு.க. தயாரா?. அ.தி.மு.க. 20 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார்.
முடிவில் வேலுமணி பேசுகையில், அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாக இருந்து, வேட்பாளர் யாராக இருந்தாலும் உழைக்க வேண்டும். தன் உயிரைக் கொடுத்து ஜெயலலிதா அமைத்த ஆட்சியை தூரோகிகள் கவிழ்க்க பார்க்கிறார்கள், அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்ட ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் சின்னத்துரை, ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிர்வாகியின் ஒருவர் மகனின் மருத்துவ செலவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்ச நிதியை அமைச்சர் வேலுமணி வழங்கினார். #admk #byelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்