search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குள்ளஞ்சாவடி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- பிளஸ்-2 மாணவர் கைது
    X

    குள்ளஞ்சாவடி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- பிளஸ்-2 மாணவர் கைது

    குள்ளஞ்சாவடி அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், கடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவருடைய பக்கத்து வீட்டில் 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

    இதையடுத்து அந்த சிறுமி வீட்டை பூட்டிவிட்டு அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இதை பார்த்த அந்த பிளஸ்-2 மாணவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

    பின்னர் சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வலியால் சிறுமி அலறினாள்.

    அவளது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிறுமியின் தாய் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த மாணவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×